ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன்(22/10/24) 100 நாட்களை எட்டியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாரத்திற்கு ஒரு தடவை என்பதாக இது மாற்றியமைக்கப்படவுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தனு அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More